Tamil News

முல்லைத்தீவில் கோர விபத்து – ஸ்தலத்திலேயே உயிரிழந்த இரு இளைஞர்கள்

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டிசுட்டான் மாங்குளம் வீதியில் 21 ஆவது கிலோ மீட்டர் கல்லுக்கு அருகில் வீதியில் நின்ற உழவியந்திரத்தில் வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இது இளைஞர்கள் உழவியந்திர பெட்டியுடன் மோதி விபத்தினை சந்தித்துள்ளார்கள்.

விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ள குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளார்கள்

உடலம் ஒட்டி சுட்டான் பொலிசாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

முள்ளியவளை பொன்னகர் பகுதியினை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்

வீதியில் நெல்லினை காயப்போட்டு ஏற்றி கொண்டு நின்ற உழவியந்திரத்தின் மீது மோதி விபத்தை சந்தித்துள்ளார்கள்.

உழவியந்திரத்தின் உரிமையாளர் மற்றும் ஒருவர் ஒட்டி சுட்டான் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் மேலதிக விசாரணை ஒட்டி சுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Exit mobile version