Site icon Tamil News

மன்னாரில் விபத்து – அருட்தந்தை உயிரிழப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட் பணியாளரும் மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தின் உதவி இயக்குனருமான  அருட்தந்தை  கே.ஜொனார்த்தனன் அடிகளார்   உயிரிழந்தார்.

தலைமன்னார் ஆலயத்தில் மாலை நேர திருப்பலியை ஒப்புக் கொடுத்த நிலையில், மீண்டும் தலை மன்னாரில் இருந்து மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்திற்கு உள்ளாகியது.

இதன் போது படுகாயமடைந்த அருட்தந்தையை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version