Site icon Tamil News

கிளிநொச்சியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்திற்கு அருகில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில், அப்பகுதியை சேர்ந்த அல்பிரட் அனுசன் (வயது 22) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனம் மோதியே இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும், டிப்பர் சாரதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version