Site icon Tamil News

கதிர்காமத்தில் மற்றுமொரு பாலியல் துஷ்பிரயோக சம்பவம்

கதிர்காமம் தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞன் ஒருவர் கதிர்காமம் பொலிஸாரால் புதன்கிழமை (14) புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கதிர்காமம் ராஜா மாவத்தையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

பாடசாலை அதிபரின் முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் ஆறு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையில் 16 வயது சிறுமி, சந்தேக நபரை காதலித்து வந்ததையும், அவர் தெட்டகமுகந்த பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு தனது ஆடைகளை கழற்றி அணைத்துக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

தான் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

எனினும், அவர் மருத்துவ பரிசோதனைக்காக கதிர்காமம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும்.

Exit mobile version