Site icon Tamil News

யாழில் மனவளர்ச்சி குன்றிய யுவதி துஸ்பிரயோகம்

யாழ்ப்பாணத்தில் மனவளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறிய தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுகவீனம் காரணமாக குறித்த யுவதியை பருத்தித்துறை ஆதார வைத்தியசலையில் அனுமதித்த வேளை மருத்துவ பரிசோதனையில் யுவதி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வேளை தாயின் சகோதரியின் கணவர் (சித்தப்பா) மற்றும் இரு இளைஞர்களாக மூவரும் இணைந்து யுவதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளனர்.

சில தடவைகள் கூட்டு வன்புணர்வுக்கும் யுவதியை உட்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் யுவதியின் சிறிய தந்தை உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை பதில் நீதவான் முன்னிலையில் மூவரையும் முற்படுத்தியதை அடுத்து ,பதில் நீதவான் மூவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Exit mobile version