Site icon Tamil News

மேம்பாலத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து இளைஞர் பலி

கொழும்பு  புறநகர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எனினும் இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (24) இரவு 7 மணி அளவில் அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு வெளிவட்ட வீதியின் 1.2 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் இருந்து குறித்த இளைஞன் வீழ்ந்துள்ளார்.

அப்போது, ​​மாத்தறை நோக்கிச் சென்ற காருடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மெனத் பனுஜா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காரும் சேதமடைந்ததுடன், கார்  சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை, பொலிசார் நடத்திய சோதனையில் உயிரிழந்த இளைஞரின் வீட்டில் தற்கொலை செய்து கொள்வதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version