Site icon Tamil News

இலங்கையர் ஒருவர் 22 வருட சிறைத்தண்டனை

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், தமிழ்நாட்டில் உள்ள இலங்கையர் ஒருவர் 22 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள வீட்டில் இலங்கையர் தனியாக வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

வழக்கின் படி, குற்றம் சாட்டப்பட்ட ஆண்டனி மார்க்ஸ் (52), ஜனவரி 2022 இல் சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ விதிகளின் கீழ் பொலிசார் மார்க்ஸை கைது செய்தனர். மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாத் மார்க்சுக்கு 5,000 ரூபா அபராதமும் விதித்தார்.

Exit mobile version