Site icon Tamil News

செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த இளம் யுவதி

அத்தனகலு ஓயாவில் குளிப்பதற்குச் சென்ற 20 வயதுடைய யுவதியொருவர் செல்ஃபி எடுக்கும்போது சரிவில் தவறி ஆற்றில் விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி கொழும்பு புறக்கோட்டையில் உள்ள குணசிங்கபுர வீட்டு வளாகத்தில் வசிப்பவர்.

திஹாரியவில் உள்ள தனது உறவினர்களை சந்திக்கச் சென்றிருந்த வேளையிலேயே அவர் இந்த துயரச் சம்பவத்தை சந்தித்துள்ளார்.

குறித்த சிறுமி, தனது உறவினர்கள் சிலருடன் நேற்று பிற்பகல் அத்தனகலு ஓயாவில் குளிப்பதற்குச் சென்றிருந்தபோது, சரிவில் தவறி ஆற்றில் விழுந்துள்ளார்.

காணாமல் போன சிறுமியை போலீசார் மற்றும் கடற்படையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version