Site icon Tamil News

ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் ஒருவர் பலி

ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளை, கவுடுபல்லல்ல ஏ9 வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மாத்தளையில் வசிக்கும் 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்பள்ளியில் இருந்து தனது குழந்தையை வீட்டிற்கு அழைத்து வரும் போது மோட்டார் சைக்கிள், வீதியின் எதிர்புறத்தில் இருந்து வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தின் சாரதியின் கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கு காரணம் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version