Site icon Tamil News

சிங்கப்பூரில் முன்னாள் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞன்

சிங்கப்பூரில் முன்னாள் காதலியை தாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் காதலியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 27 வயது இளைஞன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் காதலர் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 9இல் உள்ள தமது வீட்டிற்குள் நுழைந்து வேண்டுமென்றே தமக்குக் காயம் விளைவித்ததாக அந்தப் பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் மூலமும் கண்காணிப்புக் கமராக்களின் உதவியோடும் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் அடையாளத்தைக் கண்டுபிடித்து அவரை கைதுசெய்தனர்.

Exit mobile version