Site icon Tamil News

இத்தாலியில் வரலாற்று சிறப்புமிக்க சிலையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெண்!

இத்தாலிய அதிகாரிகள் புளோரன்ஸ் நகரில் உள்ள பாக்கஸ் சிலையுடன் பாலியல் சீண்டல்களை மேற்கொண்ட பெண் ஒருவரை தேடி வருகின்றனர்.

அடையாளப்படுத்தப்படாத குறித்த பெண் தற்போது வாழ்நாள் முழுவதும் நகரத்தில் இருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணானவர் கியாம்போலோனாவின் பச்சஸ் மீது ஏறி இத்தாலிய வெண்கலச் சிலையை முத்தமிடுவதை  ஒளிப்படங்கள் காட்டுகின்றன.

அவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் நாட்டில் கலாச்சார பாரம்பரியத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தடைசெய்யும் சட்டத்தின்படி, அவர் அபராதங்களை எதிர்கொள்ளலாம் என்றும், நகரத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version