Site icon Tamil News

பெலாரஸிலிருந்து உக்ரைனை தாக்க அணு ஆயுதங்களை தயார் செய்யும் புட்டின்

பெலாரஸிலிருந்து அணு ஆயுதங்களுடன் உக்ரைனை தாக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

நடந்து வரும் ரஷ்ய-உக்ரைன் போரில் நேட்டோ படைகள் மற்றும் அமெரிக்கா நாடுகள் உக்ரைனிற்கு உதவுதை விரும்பாத ரஷ்யா, அவர்களை அச்சுறுத்தும் விதமாக ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து அணு ஆயுதங்களை செலுத்தும் முயற்சியை சமீப நாட்களில் அரேங்கேற்றியுள்ளது.

இதைத் தொடர்ந்து பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தங்கள் நாட்டினை உக்ரைனை தாக்கும் ஏவுதளமாக பயன்படுத்துங்கள் என்ற நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற விளாடிமிர் புட்டின், தற்போது குறுகிய தூரத்தை தாக்கும் அணு ஆயுத ஏவுகணைகளை பெலாரஸ்சிற்கு ரஷ்யாவில் இருந்து அனுப்பியுள்ளார்.

எப்படியிருப்பினும், எந்த விதமான அணு ஆயுத கொள்கைகளையும் ரஷ்யா மீறவில்லை என்று அழுத்தமாக கூறிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் , இது ரஷ்ய-உக்ரைன் போரின் ஒரு முக்கியமான படி என்றும் தெரிவித்தார்.

 

Exit mobile version