Site icon Tamil News

போரின் கோர தாண்டவத்திற்கு மத்தியில் நடந்தே சென்று குழந்தை பெற்றுக்கொண்ட பெண்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடுமையான போர் இடம்பெற்று வருகின்ற நிலையில், பாலஸ்தீனத்தில் இருந்து பெண் ஒருவர் நடந்தே சென்று குழந்தை பெற்றுக்கொண்ட சம்பவம் கண்ணீரை வரவழைக்கிறது.

இமான் அல்-மஸ்ரி, என்ற பெண் ஒருவர் தனது நான்காவது குழந்தையை பெற்றுக்கொள்ள பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்து ஏறக்குறைய 05 கி.மீற்றர் நடந்துச் சென்று தெற்கு காசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது குழந்தையை பெற்றுக்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும் போரின் பிடியில் பாதித்துள்ள மற்ற நோயாளிகளுக்கு இடமளிக்க வேண்டிய கட்டாயத்தில் குழந்தையுடன் வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்து சில மணிநேரங்களே ஆன குழந்தையுடன், பாதுகாப்பான இருப்பிடத்தை கண்டுபிடிக்க போராடும் அவர்களின் நிலையை இணையத்தள வாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், இஸ்ரேலின் கோரமுகத்தையும் காட்டி இருப்பதாக வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

Exit mobile version