Site icon Tamil News

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம், மாரவில பகுதியில் வசிக்கும் 52 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் நேற்று அதிகாலை 03.15 மணியளவில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த பெண் கொண்டுவந்த பயணப் பொதியிலிருந்து 23,000 சிகரெட்டுகள் அடங்கிய 115 சிகரெட்டு கார்ட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 24 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version