இலங்கையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் ஒருவர் கடவத்தை, கோனஹேன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து 230 போதைப்பொருள் மற்றும் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக கடவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.