வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
49 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். திருமணமாகி ஒரு பிள்ளைக்கு தாயான இவர், நேற்று முன்தினம் இவ்வாறு விழுந்து உயிரிந்துள்ளார்.
தனது கணவர் சொந்த வேலை நிமித்தம் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று மகன் வீட்டில் படித்துக் கொண்டிருந்ததுடன், அவர் அறையில் நாற்காலியை 8வது மாடிக்கு எடுத்து சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்