Site icon Tamil News

இலங்கையில் கடிதம் எடுதி விட்டு வைத்தியர் எடுத்த விபரீத முடிவு

மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கழுத்தில் சுருக்கிட்டு அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

வெலியாய பகுதியில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் பிரத்தியேக இல்லத்திலேயே அவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த வைத்தியர் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக கடிதம் ஒன்றினையும் எழுதி வைத்துள்ளார்.

தன்னுடைய இந்த தற்கொலை தீர்மானத்துக்காக எவரையும் சந்தேகிக்க வேண்டாம் எனவும் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

42 வயதுடைய வைத்தியர் ஒருவரே தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான வேறு காரணங்கள் கண்டறியப்படாத நிலையில், பிரேத பரிசோதனையின் போது தற்கொலை செய்துக்கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version