Site icon Tamil News

பொகவந்தலாவில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் கைது!

பொகவந்தலாவ புனித மரியாள் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி  குறித்த ஆசிரியர் மாணவியை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருமாறு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு மாணவி சென்றதையடுத்து அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும்,  ஆசிரியரை ஹட்டன் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியை வைத்திய பரிசோதனைக்காக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version