Site icon Tamil News

நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டாக்சி – ஐவர் பலி, ஒருவர் மாயம்!

நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் டாக்சி கவிழ்ந்ததில் 5 பேர் இறந்தனர் மற்றும் ஒருவர் காணாமல் போன சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் உயிரிழந்த 5 பேர்களில் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரி கூறுகையில், “காத்மாண்டுவில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு டிரைவர் உள்பட 6 பேர் டாக்சியில் இன்று காலை வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த டாக்சி சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் விழுந்தது.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போனதால் அந்த நபரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. உயிரிந்தவர்களில் ஒருவர் டாக்சியின் டிரைவர் என தெரியவந்துள்ளது” என்றார்.

Exit mobile version