Site icon Tamil News

ஓஹியோவின் ஹில்ஸ்போரோவில் கடை ஒன்று தீவிபத்தில் சிக்கியது : 03 பேர் பலி!

ஓஹியோவின் ஹில்ஸ்போரோவில் வணிக வளாகம் ஒன்று தீபிடித்து எரிந்ததில், 03 பேர் உயிரிழந்துள்ளனர்.  இது சம்பந்தமான காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்கிழக்கு ஓஹியோவில் உள்ள ஜிம்போவின் ஆட்டோ ஷாபில் மாலை நேரத்தில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கடையின் சில பகுதிகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பேர் இறந்த நிலையில், நான்காவது நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தீபத்துக்கான காரணம் குறித்து அறிய தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version