Site icon Tamil News

சீனாவில் பாலர் பாடசாலையில் கத்தி குத்து தாக்குதல் : 06 பேர் உயிரிழப்பு!

சீனாவில் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில், 06 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் இன்று (ஜுலை 10) சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஒரு ஆசிரியர், மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெற்றோர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சமப்வத்துடன் தொடர்புடைய 25 நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version