Site icon Tamil News

அமெரிக்காவில் துணை மின்நிலையத்திற்குள் நுழைந்த பாம்பு!!! 16,000 பேருக்கு மின் துண்டிப்பு

அமெரிக்காவில் துணை மின்நிலையத்திற்குள் நுழைந்து உபகரணங்களுடன் சிக்கிக்கொண்டமையினால் ஆஸ்டினில் உள்ள 16,000 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர்.

Matt Mitchell, Austin Energy இன் செய்தித் தொடர்பாளர் கருத்துப்படி, மே 16 அன்று மதியம் 1 மணிக்கு இந்த செயலிழப்பு தொடங்கியதாகவும் இது சுமார் 16,000 வாடிக்கையாளர்களை பாதித்ததாகவும் கூறியுள்ளார்.

பாம்பு ஒன்று துணை மின்நிலையத்தில் நுழைந்து மின்சாரம் பாய்ந்த சுற்றுடன் சிக்கிக்கொண்டதால் இந்த சம்பவம் நடந்தது.

பின்னர் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மதியம் 2 மணிக்கு மேல் மின்சாரம் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஊர்வன நுழையாமல் இருக்க துணை மின் நிலையங்களைச் சுற்றி குறைந்த மின்னழுத்த மின்சார பாம்பு வேலிகளை நிறுவும் பணியில் நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளதாக என்று அவர் கூறினார்.

“மேலும், நமது செயல்பாடுகளில் குறுக்கிடக்கூடிய குறிப்பிட்ட வனவிலங்குகளுக்கு இது ஒரு தடுப்பாக செயல்படும் என்று நம்புகிறோம்.

மின்சார துண்டிப்பு எளிதான காரியம் அல்ல. எனவே பாதுகாப்பாக மீட்டமைக்க முடிந்தவரை விரைவாக பதிலளிக்க நாங்கள் எப்போதும் விரும்புகிறோம் என்றார்.

கடந்த ஆண்டு இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ஜப்பானில் பாம்பு ஒன்று மின்சார துணை மின்நிலையத்திற்குள் நுழைந்ததால் சுமார் 10,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version