Site icon Tamil News

பரிதாபமாக உயிரிழந்த ஆறு மாத குழந்தை!! தாய் கைது

ஊருபொக்க, மகிழியதென்ன பிரதேசத்தில் 6 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயான 21 வயதுடைய பெண் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையை குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது, நாய் தனது காலைப் பிடித்ததால் குழந்தையின் தலை சுவரில் மோதியதாக குழந்தையின் தாய் முன்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால் குழந்தையின் பிரேத பரிசோதனையின் பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி டி.டி. மண்டை ஓடு, மூளை, முதுகுத்தண்டு, மார்பு, வயிறு, கீழ் தாடை ஆகிய பகுதிகளில் மழுங்கிய சக்தியை செலுத்தியதால் குழந்தையின் மரணம் நிகழ்ந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

உரிய பிரேதப் பரிசோதனைத் தகவலின் பிரகாரம் ஊர்பொக்க பொலிஸார் குழந்தையின் தாயை கைது செய்து நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதுடன் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version