பின்லாந்தின் வான்டாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இன்று (02.04) காலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக விடாசே ஊடகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த பாடசாலையில் 800 மாணவர்களும் 90 ஊழியர்களும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.