Site icon Tamil News

பிரான்ஸில் முன்னாள் காதலியின் காதலனால் நபருக்கு நேர்ந்த கதி

பிரான்ஸில்உயிருக்கு ஆபத்தான நிலையில் நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

9 தடவைகள் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரிஸின் தென்கிழக்கு புறநகரில் இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவர் மிக கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். ஒன்பது வெட்டுக்காயங்கள் அவரது உடலில் இருந்ததாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தாக்குதலுக்கு இலக்கான நபரின் முன்னாள் காதலியின் தற்போதைய காதலனே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

தாக்குதல் மேற்கொண்டவர் மறுநாள், நேற்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version