Site icon Tamil News

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

2023 ஆம் ஆண்டுக்கான எந்தவொரு மின்சார சபை ஊழியர்களுக்கும் போனஸ், சம்பள அதிகரிப்பு அல்லது ஊக்கத்தொகை வழங்கப்படக்கூடாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அத்துடன், மின்சார சபை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு ஊக்கத்தொகைகள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய தகவல்களை வழங்குமாறும், வாடகையாக செலுத்தப்பட்ட பணம் மற்றும் அதிகாரிகள் வாடகைக்கு எடுத்த வாகனங்கள் குறித்த அறிக்கையை வழங்குமாறும் அமைச்சர் மின்சார சபைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version