Site icon Tamil News

பிரான்ஸில் 80 வயது மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸின் மார்செய் நகரின் புறநகரப் பகுதியில் வயோதிப பெண் ஒருவர் அதிர்ச்சி சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

குறித்த பகுதியில் வசிக்கும் 80 வயதிலுள்ள ஒரு மூதாட்டி, தவறுதலாக தனது கதவை பூட்டாமல் விட்டிருந்துள்ளார்.

இதனை அவதானித்த திருடன் ஒருவன் உள்ளே புகுந்து, அந்த மூதாட்டயை மிரட்டி பணம் கோரி தாக்கியுள்ளார்

எதுவும் கிடைக்காமையினால், திருடர் அந்த மூதாட்டியை பாலியல் வண்புணர்வு செய்து விட்டுத் தப்பியோடி உள்ளார். அயல் வீடொன்றில் தஞ்சம் புகுந்த இந்த மூதாட்டி, அங்கிருந்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

அவர் கூறிய அடையாளங்களின் படி, குற்றவாளியை சிலமணி நேரங்களில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மீது இதுபோன்ற பல வழக்குகள் ஏற்கனவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version