Site icon Tamil News

ஜப்பானில் உணவகத்தில் தண்ணீர் குடித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள உணவகத்துக்குச் சென்ற கொரிய பெண்ணுக்கு பிளீச் (bleach) கலந்த தண்ணீர் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அச்சம்பவத்தை விசாரிக்கும்படி ஜப்பானைத் தென்கொரிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இம்மாதம் 6ஆம் திகதி சம்பவம் குறித்து காங் எனும் அந்தப் பெண், தோக்கியோவில் இருக்கும் கொரியத் தூதரகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

காங்கும் ஜப்பானியரான அவரது கணவரும் தோக்கியோவில் இருக்கும் உயர்தர உணவகத்துக்குச் சென்றிருந்தனர்.

அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் தரப்பட்டது. அதைக் குடித்த காங், நீரிலிருந்து விசித்திரமான மணம் வருவதைக் கவனித்தார். இரண்டாம் முறை அதைக் குடித்தபோது தொண்டை வலி ஏற்பட்ட நிலையில் சரியாகப் பேச முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அதைப் பற்றி உணவக ஊழியர்களிடம் தெரிவித்தபோது எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

காங்கின் கணவர் சமையல்காரரிடம் கடுமையாக நடந்துகொண்ட பிறகே உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. பிளீச் கலந்த தண்ணீர் கொடுக்கப்பட்டதை ஊழியர் ஒப்புக்கொண்டார்.

Exit mobile version