Site icon Tamil News

சிங்கப்பூரில் மனைவியை கொலை செய்தவருக்கு கிடைத்த தண்டனை!

சிங்கப்பூரில் கடந்த 2019ஆம் ஆண்டு தமது மனைவியை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட 86 வயது நபருக்கு நேற்று 15 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Pak Kian Huat எனும் அந்த நபர் Lim Soi Moy எனும் 79 வயதுப் பெண்ணைப் பாரங்கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

சம்பவம் HDB வீடொன்றில் நடந்தது. எந்தப் படுக்கையறையில் யார் உறங்குவது என்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கொலை வரை சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

முதலில் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த Pak Kian Huat பின்னர் மரணம் விளைவித்ததாகக் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

அவருக்குத் தண்டனை விதித்த நீதிபதி See Kee Oon மிகவும் கொடூரமான முறையில் பெண் தாக்கப்பட்டதைச் சுட்டினார்.

மரணம் விளைவித்த குற்றத்திற்குப் பிரம்படியுடன் கூடிய ஆயுள்தண்டனை அல்லது அபராதம், பிரம்படியுடன் கூடிய 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

50 வயதுக்கு மேற்பட்ட குற்றவாளிகளுக்குப் பிரம்படி கிடையாது.

Exit mobile version