Site icon Tamil News

பிரான்ஸில் ரயிலுக்காக நின்ற பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் பயணி ஒருவரை தண்டவாளத்தில் தள்ளி வீழ்த்திய ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பரிசில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Opéra ரயில் நிலையத்தில், மாலை 6 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெறுள்ளது.

ரயிலுக்காக காத்திருந்த ஒருவரை அங்கு வருகை தந்த ஒருவர் தள்ளி வீழ்த்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத குறித்த பயணி, நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.

அதிஷ்ட்டவச்சமாக அப்போது ரயில் எதுவும் வரவில்லை என்பதால் அவர் காயமின்றி உடனடியாக மீட்கப்பட்டார்.

ரயில் நிலையத்தில் காவலில் ஈடுபட்ட பொலிஸார் உடனடியாக செயற்பட்டு, குறித்த தாக்குதலாளியை கைது செய்தனர்.

மதுபோதையில் இருந்த அவர் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவத்தினால் சில ரயில் சேவைகள் தடைப்பட்டன.

Exit mobile version