Site icon Tamil News

பிரான்ஸில் விடுமுறைக்குச் சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் நீச்சல் தடாகம் ஒன்றுக்குள் மூழ்கி இரண்டு வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தென்கிழக்கு பிரான்சான Alpes-Maritime நகரில் கடந் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இங்குள்ள தனியாருக்குச் சொந்தமான வீடு ஒன்றில் உள்ள நீச்சல் தடாகத்திலேயே சிறுவன் தவறி விழுந்துள்ளார்.

குடும்பத்துடன் விடுமுறைக்குச் சென்ற குறித்த சிறுவன் சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில், பெற்றோர்கள் கவனிக்காத நேரத்தில் நீச்சல் தடாகத்துக்குள் தவறி விழுந்துள்ளார்.

சில நிமிடங்களின் பின்னரே சிறுவன் தண்ணீருக்குள் விழுந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதும் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மேற்படி துன்ப நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version