Site icon Tamil News

புயலில் சிக்கிய கப்பல் : காப்பாற்ற வந்த கெப்டன்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கக் கப்பல் புயலில் சிக்கிய போது, அந்த  ​​கப்பலை காப்பாற்ற ரணில் விக்கிரமசிங்க என்ற கப்டனிடம் ஒப்படைத்ததாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் பொல்கஹவெல தொகுதியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கப்புட்டாவின் கப்பலை புயலில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்துவிட்டதாகவும், தற்போது கப்புட்டாவை தூக்கி கடலில் வீச யாரும் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக வருவாரா என சிலர் கேட்பதாகவும், அது குறித்து இன்னும் தீர்மானிக்க வில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version