Site icon Tamil News

பாடசாலை மாணவன் ஒருவரின் தவறான முடிவு

ஹட்டன் பொலிஸ் எல்லைக்குட்பட்ட லெடன்டி தோட்டத்தின் மார்ல்பரோ பிரிவில் வசித்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஹட்டன் பன்மூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ஆர்.கோபி ஹர்ஷன் என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மாணவனின் தாயாருடன் தோட்டத்தில் உள்ள கோவிலில் நேற்று (30) மதியம் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட பின்னர், வீட்டின் சமையலறைக்கு அருகில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version