Site icon Tamil News

இந்தோனேசியாவில் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம்!

இந்தோனேசியாவில் ஆளுநரின் மனைவி உட்பட டஜன் கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் 1.2 கிமீ ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானது.

திரிகானா ஏர் ஏடிஆர்-42 விமானம் தென்கிழக்கு ஆசிய நாட்டின் பப்புவா பகுதியில் உள்ள யாபென் தீவில் உள்ள விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு,  ஜெயபுராவுக்குச் செல்ல திட்டமிடப்பட்டது.

ஆனால் குறித்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஓடுபாதையில் இருந்து சறுக்கியது.

இந்த விமானத்தில் பப்புவாவின் செயல் ஆளுநர் ராம்செஸ் லிம்போங்கின் மனைவி கெர்டின் ராம்செஸ் உட்பட 42 பயணிகள் இருந்தனர். இந்த அனர்த்தத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்பதை பொலிசார் பின்னர் உறுதி செய்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

Exit mobile version