Site icon Tamil News

கனடாவில் குழந்தையை கடத்திய நபர் – அதிரடியாக கைது செய்த பொலிஸார்

கியூபெக் பகுதியில் கடந்த வாரம் குழந்தை ஒன்று கடத்தப்பட்டதாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அந்த விவகாரம் தொடர்பில் நோவா ஸ்கோடியா நபர் ஒருவர் கைதாகியுள்ளார்.

நோவா ஸ்கோடியா மாகாணத்தின் Lanesville பகுதியை சேர்ந்த 31 வயது நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் என்றே கூறப்படுகிறது.

கடந்த வாரம் வியாழக்கிழமை கியூபெக் பிராந்திய பொலிஸார் குழந்தை ஒன்று மாயமானது தொடர்பில் அம்பர் எச்சரிக்கை விடுத்தனர். மட்டுமின்றி, அந்த நபர் தொடர்பில் நலம் விசாரிக்கவும் பொலிஸாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாண்ட்ரீலுக்கு கிழக்கே சுமார் 190 கிலோமீற்றர்கள் அப்பால் Saint-Louis-de-Blandford பகுதியில் அந்த நபர் குழந்தையுடன் வாகனம் ஒன்றில் பயணிப்பது பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

மேலும், எரிபொருள் நிரப்ப வாகனத்தை நிறுத்திய அவர், பணம் செலுத்தாமல் தப்பியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, எரிபொருள் நிலையத்தின் ஊழியர் ஒருவர் அந்த குழந்தை மற்றும் வாகனத்தின் புகைப்படத்தை பதிவு செய்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

Exit mobile version