Site icon Tamil News

நெதர்லாந்தில் விமான எஞ்சினில் சிக்கிய நபர் பரிதாபமாக உயிரிழப்பு!

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமின் பிரதான விமான நிலையத்தில் விமானத்தின் இன்ஜினுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஷிபோல் விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராகிக்கொண்டிருந்த KLM Cityhopper Embraer E190 இன் எஞ்சினில் அந்த நபர் சிக்கிக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் பயணிகள் மற்றும் பணியாளர்கள் இந்த துயர மரணத்தை கண்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பயணியா அல்லது விமான ஊழியரா என்பது தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

KLM Cityhopper Embraer E190 டென்மார்க்கிற்குப் புறப்படுவதற்குத் தயாராகும் வகையில் ஸ்டாண்டில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டபோது குறித்த நபர் எஞ்சினில் சிக்கியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version