Site icon Tamil News

பிரான்ஸில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி – காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி

பிரான்ஸில் பெண் ஒருவரை வழிமறித்த கொள்ளையர்கள் இருவரிடம் இருந்து பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

குறித்த பெண்ணை தாக்கி அவரிடம் இருந்த பணப்பையை கொள்ளையிட முற்பட்டுள்ளனர்.

பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இளம் பெண் ஒருவரது பணப்பையை இரு நபர்கள் கொள்ளையிட முற்பட்டனர். அதன் போது அப்பெண்ணை பலமாக தாக்கியுள்ளனர்.

இதனை நேரில் பார்த்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக தலையிட்டு அப்பெண்ணை காப்பாற்றினர். BAC படையில் கடமையாற்றும் குறித்த அதிகாரி இச்சம்பவத்தின் போது கடமையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version