Site icon Tamil News

இந்தியாவில் குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் இலங்கையில் கைது!

இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் இலங்கை பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் பங்களாதேஷில் போலியான விமான அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வந்த இந்த நபர் வியாபாரி போல் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்திய பாதுகாப்புப் படையினரும் இலங்கைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து நடத்திய விசேட புலனாய்வு நடவடிக்கையின் பின்னர், இந்த நபர் கைது செய்யப்பட்டு இந்திய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது.

Exit mobile version