Site icon Tamil News

சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்

மீரிகம, தங்கொவிட்ட வீதியில் வீடொன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போது அருகில் இருந்த பக்கச்சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிக்கிய ஒருவர் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் மீரிகம, தவலம்பிட்டிய இலக்கம் 120 ஐச் சேர்ந்த மைக்கல் ரத்நாயக்க (வயது 63) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் வீடொன்றை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் வீட்டின் பின்புறமாக அமைக்கப்பட்டிருந்த பக்கச்சுவர் இடிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அவரது தலையில் பாரிய காயம் ஏற்பட்டிருந்ததுடன், உள்ளூர்வாசிகளின் உதவியுடன், நபரை மீட்டு மீரிகம ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version