Site icon Tamil News

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

5000 ரூபா பெறுமதியான 5 போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கதிர்காமம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் ஒரே இலக்கத்தைக் கொண்ட 5000 ரூபா பெறுமதியான 5 போலி நாணயத்தாள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தெபரவெவ கெமுனுபுர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Exit mobile version