Site icon Tamil News

3 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் ஒருவர் கைது!

தனியார் நிறுவனமொன்றை பதிவு செய்து அதில் முதலீடு செய்பவர்களுக்கு அதிகம் இலாபம் பெற்றுத் தருவதாகக்கூறி 3 கோடி ரூபாய் நிதி மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத் தக்க நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கோகலை பகுதியில் தனியார் நிறுவனமொன்றை பதிவு செய்துள்ளதுடன், நிதி முதலீடுகளுக்காக பெரும் இலாபம் பெற்றுத்தருவதாக உறுதியளித்து பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார்.

இது குறித்து 9 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

Exit mobile version