Site icon Tamil News

பணயக் கைதிகளை விடுவிக்கக் கோரி இஸ்ரேலில் வெடித்தது பாரிய போராட்டம்!

காஸாவில் எஞ்சியுள்ள பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு தலைமையிலான அரசாங்கம் ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட வேண்டும் என இஸ்ரேலில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் இஸ்ரேலியர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு காசாவில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றிலிருந்து ஆறு பணயக் கைதிகளின் உடல்கள் அண்மையில் மீட்கப்பட்டதையடுத்து இந்தப் போராட்டம் முன்னெடுன்னப்படுகிறது.

Exit mobile version