Site icon Tamil News

சிங்கப்பூரில் 80 வயது மூதாட்டிக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்!

சிங்கப்பூரில், 80 வயதான மூதாட்டியை ஏமாற்றியதாக 58 வயதான நிலத்தரகர் Tan என்பவர் மீது , குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த மூதாட்டியின் சொத்தை விற்க Tan உதவியதாக கூறப்படுகிறது. சொத்து விற்ற பணம் S$462,300ஐ வைப்பு செய்ய இருவரும் இணைந்து கூட்டு வங்கிக் கணக்கை தொடங்கினர்.

Tan அந்த மூதாட்டியிடம், அவரை பார்த்துக் கொள்வதாகவும், வங்கி கணக்கில் உள்ள பணத்தை தனது தேவைக்காக எடுத்து பயன்படுத்தப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால், அவர் கூறியதற்கு மாறாக நடந்து கொண்டு மூதாட்டியை ஏமாற்றியுள்ளார். Tan, மூதாட்டியின் அனுமதி பெறாமல் இன்டர்நெட் பேங்கிங் மூலம் S$20,000 சிங்கப்பூர் டொலரை தனது சொந்த செலவிற்காக எடுத்துள்ளார்.

இதை அறிந்த மூதாட்டி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். விசாரணையில் Tan தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version