பிரித்தானியாவில் ஸ்டோக்-ஆன்-ட்ரெண்டில் உள்ள ஒரு வீட்டில் 70 வயது மதிக்கத்தக்க ஆணும் பெண்ணும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கேட்டலினா பிளேஸ், மீர் பூங்காவில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
பிற்பகல் 2.30 மணியளவில் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், சம்பவத்தின் பின்னணியை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.