Site icon Tamil News

பிலிப்பைன்ஸில் 4.7 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் சாரங்கனி பகுதியில் இன்று நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இது 4.7ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் சாரங்கனி பகுதியில் இருந்து தென்கிழக்கே 157 கிலோ மீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version