Site icon Tamil News

திருமண விழாவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து… 3 குழந்தைகள் உள்பட அறுவர் பலி!

பீகாரில் திருமண விழாவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பசுக்களும் பலியாகின.

பீகார் மாநிலம், தர்பங்கா அருகே பஹேரா பகுதியில் உள்ள அலி நகரில் திருமண விஷேச வீட்டில் நேற்று இரவு 11.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விஷேசத்தை முன்னிட்டு அங்கு போடப்பட்டிருந்த கொட்டகையில் தீப்பிடித்து. திருமண கொண்டாட்டத்தின்போது, பட்டாசு வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தீ விபத்து குறித்து தர்பங்கா மூத்த பொலிஸ் சூப்பிரண்டு ஜகுநாத் ரெட்டி கூறுகையில், “தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததுமே ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றன. சிறிது நேரத்தில் தீ அணைத்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையே இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இயன்ற அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என மாவட்ட கலெக்டர் ராஜீவ் ரோஷன் தெரிவித்துள்ளார்.திருமண விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version