Site icon Tamil News

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா

2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வெங்காய ஏற்றுமதிக்கு, 2024 மார்ச் வரை, மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயா்ந்து வரும் நிலையில், விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், சாமானிய மக்கள் வெங்காய விலை உயா்வால் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், பிற நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version