Site icon Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை தங்க பிஸ்கட்கள்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 16 தங்க பிஸ்கட்டுகளை சுங்க கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அந்த தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் நான்கு கோடியே நாற்பது இலட்சம் என சுங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை காலியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தங்க பிஸ்கட்டுகளை கொண்டு வந்துள்ளார்.

இந்த தங்க பிஸ்கட்களை தலா 08 பொட்டலங்களாக 02 பொட்டலங்களாக தயார் செய்து தான் கொண்டு வந்திருந்த பக்கவாட்டு பையில் வைத்து விமான நிலைய லக்கேஜ் டிராலியின் கீழ் வைத்து விமான நிலையத்தை விட்டு வெளியேற ஆயத்தமானார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version