Site icon Tamil News

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் – நாடாளுமன்றில் சிரட்டை வழங்கிய சிறிதரன் எம்.பி

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூரும் வகையில் நாடாளுமன்றில் ‘சிரட்டை’ ஒன்றை வழங்கி நாடாளுமன்ற நூலகத்தில் வைக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (13) இடம்பெற்ற நிதி ஒழுங்குகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இந்த மாதம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நமது வலிகளை வெளிப்படுத்துகிறது. இந்த ‘சிரட்டை’ சபா பீடத்தில் சமர்ப்பிக்கிறேன். இது முள்ளிவாய்க்காலில் எமது மக்களுக்கு கஞ்சி வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டது.

அப்போது குடிக்கும் சாதனம் இல்லை. கஞ்சி செய்ய அரிசி இல்லை. உப்பு இல்லை. தண்ணீர் எடுக்க முடியாத நிலை  ஏற்பட்டது.

இவ்வாறான நிலையில் இந்த  சிரட்டையில் உப்பில்லாத கஞ்சியை மட்டும் குடித்துவிட்டு எமது மக்களும் குழந்தைகளும் தப்பினர்.

எனவே, நிறைவுக்கு அடையாளமாக இந்தச் சிரட்டையை சபா பீடத்தில் சமர்ப்பிக்கிறேன். தயவு செய்து இந்த சிரட்டையை நாடாளுமன்ற நூலகத்தில் வைக்குமாறு. – கூறினார்.

Exit mobile version