Site icon Tamil News

இலங்கையில் வீடொன்று சுற்றிவளைப்பு – மெத்தையின் கீழ் சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி

களுத்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 வாள்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குற்றம் செய்யும் நோக்கில் இந்த வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் களுத்துறை, மிஹிகடவத்தை பிரதேசத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Exit mobile version